மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக காணாமல் போயிருந்த சாதிய படங்கள் பா.ரஞ்சித் இயக்குனராக வந்த பிறகு மீண்டும் மறைமுகமாக தலைதூக்க ஆரம்பித்தது. அவரது இயக்கத்தில் வெளிவந்த படங்களில் அப்படியான காட்சிகள், வசனங்களைப் பார்க்கலாம்.
அதற்கு எதிர்வினையாற்றும் விதத்தில் 'திரௌபதி' என்ற படத்தை இயக்குனர் மோகன் வெளியிட்டு அவரும் சினிமாவில் சாதிய மோதலை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'கர்ணன்' படத்திலிருந்து 'திரௌபதி முத்தம்' என்ற பாடலை நாளை(மார்ச் 11) வெளியிட உள்ளதாக அறிவித்தார்கள். அதற்கு பல ரசிகர்கள் டுவிட்டர் தளத்தில் 'திரௌபதி' பட இயக்குனர் மோகனை டேக் செய்து விமர்சித்தார்கள்.
அதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக மோகன் டுவிட்டரில், அவரவர் எண்ணம் போல் அவரவர் வாழ்க்கை அமையும். அவரவர் சிந்தனை போல அவரவர் செயல்கள் அமையும்..அக்னிக்கு எதுடா சுத்தம் அசுத்தம் எல்லாம்.. அக்னி தாய்க்கும் அப்படித்தான்.. யாரலும் அசுத்த படுத்த முடியாது.. உங்கள் செயலுக்கான முடிவை அவளே பார்த்து கொள்வாள்..” என கருத்து தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சமூக வலைத்தளத்தில் மோகன் டுவிட்டர் கணக்கில் கமெண்ட்டுகள் என்ற பெயரில் சாதிய மோதல் கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.