'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
தமிழ் சினிமாவில் பல வருடங்களாக காணாமல் போயிருந்த சாதிய படங்கள் பா.ரஞ்சித் இயக்குனராக வந்த பிறகு மீண்டும் மறைமுகமாக தலைதூக்க ஆரம்பித்தது. அவரது இயக்கத்தில் வெளிவந்த படங்களில் அப்படியான காட்சிகள், வசனங்களைப் பார்க்கலாம்.
அதற்கு எதிர்வினையாற்றும் விதத்தில் 'திரௌபதி' என்ற படத்தை இயக்குனர் மோகன் வெளியிட்டு அவரும் சினிமாவில் சாதிய மோதலை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'கர்ணன்' படத்திலிருந்து 'திரௌபதி முத்தம்' என்ற பாடலை நாளை(மார்ச் 11) வெளியிட உள்ளதாக அறிவித்தார்கள். அதற்கு பல ரசிகர்கள் டுவிட்டர் தளத்தில் 'திரௌபதி' பட இயக்குனர் மோகனை டேக் செய்து விமர்சித்தார்கள்.
அதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக மோகன் டுவிட்டரில், அவரவர் எண்ணம் போல் அவரவர் வாழ்க்கை அமையும். அவரவர் சிந்தனை போல அவரவர் செயல்கள் அமையும்..அக்னிக்கு எதுடா சுத்தம் அசுத்தம் எல்லாம்.. அக்னி தாய்க்கும் அப்படித்தான்.. யாரலும் அசுத்த படுத்த முடியாது.. உங்கள் செயலுக்கான முடிவை அவளே பார்த்து கொள்வாள்..” என கருத்து தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சமூக வலைத்தளத்தில் மோகன் டுவிட்டர் கணக்கில் கமெண்ட்டுகள் என்ற பெயரில் சாதிய மோதல் கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.