பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் காடன். கும்கி படத்தை அடுத்து இந்த படத்தையும் யானை சம்பந்தப்பட்ட கதைக்களத்தில் படமாக்கியிருக்கிறார் பிரபுசாலமன். இப்படம் மார்ச் 26-ந்தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில் இன்று(மார்ச் 3) காடன் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், யானைகள் காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் காட்டுப்பகுதியை அழித்து அதை நகரமாக்கும் முயற்சியில் அமைச்சர் ஒருவர் இறங்குகிறார். அவரை தடுத்து நிறுத்த கடுமையாக போராடுகிறார் ராணா. இப்படியொரு கதைக்களத்தில் தான் காடன் படம் உருவாகியிருப்பதை அந்த டிரைலரில் புரிந்து கொள்ள முடிகிறது.
அதோடு, ''யானைகளின் வீட்டிற்குள் புகுந்து மனிதர்கள் அட்டகாசம்'' என ஒரு வசனமும் இடம் பெற்றுள்ளது. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள இந்த டிரைலர் இப்போதே படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாந்தனு மொயித்ரா இசையமைக்க, அசோக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது.