2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

பிரபுசாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் காடன். கும்கி படத்தை அடுத்து இந்த படத்தையும் யானை சம்பந்தப்பட்ட கதைக்களத்தில் படமாக்கியிருக்கிறார் பிரபுசாலமன். இப்படம் மார்ச் 26-ந்தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில் இன்று(மார்ச் 3) காடன் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், யானைகள் காலம் காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் காட்டுப்பகுதியை அழித்து அதை நகரமாக்கும் முயற்சியில் அமைச்சர் ஒருவர் இறங்குகிறார். அவரை தடுத்து நிறுத்த கடுமையாக போராடுகிறார் ராணா. இப்படியொரு கதைக்களத்தில் தான் காடன் படம் உருவாகியிருப்பதை அந்த டிரைலரில் புரிந்து கொள்ள முடிகிறது.
அதோடு, ''யானைகளின் வீட்டிற்குள் புகுந்து மனிதர்கள் அட்டகாசம்'' என ஒரு வசனமும் இடம் பெற்றுள்ளது. ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள இந்த டிரைலர் இப்போதே படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாந்தனு மொயித்ரா இசையமைக்க, அசோக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது.