நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு | 75 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | சமந்தாவை வரவேற்ற கணவர் குடும்பத்தார் | அடுத்தடுத்த ரிலீஸ் : தமிழில் வெற்றியைப் பதிவு செய்வாரா கிரித்தி ஷெட்டி | அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்ட படங்கள் | யோகிபாபு எப்படிப்பட்டவர் தெரியுமா? : சாரா இயக்குனர் பரபர குற்றச்சாட்டு | தியேட்டரில் திரையிட தயங்கியதால் 'சாவு வீடு' டைட்டில் மாற்றம் |

2005ல் பி.வாசு இயக்கத்தில் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு என பலர் நடித்து வெளியான பிளாக்பஸ்டர் படம் சந்திரமுகி. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு பி.வாசு தயாரானபோது அதில் நடிக்க ரஜினி விரும்பவில்லை. அதன்காரணமாக ரஜினிக்கான அந்த கதையில் ராகவா லாரன்சை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்தார். கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே சந்திரமுகி-2 உருவாக இருப்பது போன்று பரபரப்பு செய்திகள் வெளியாகின. ஆனால் அதையடுத்து அப்படம் குறித்த பேச்சே இல்லாததோடு, ராகவா லாரன்சும் ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார்.
இதனால் சந்திரமுகி-2 படம் கைவிடப்பட்டு விட்டதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து நடிகர் ராகவா லாரன்ஸ் அதுகுறித்து ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், சந்திரமுகி-2 படம் கைவிடப்படவில்லை. தற்போது நான் நடித்து வரும் ருத்ரன் முடிந்ததும் சந்திரமுகி-2 படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்று தெரிவித்து அப்படம் குறித்து பரவி வரும் வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.