வீடு புகுந்து மிரட்டுகிறார்கள்: முத்துராமலிங்க தேவராக நடித்த நடிகர் புகார் | தமன்னா காட்சிகள் நீக்கம் தவிர்க்க முடியாதது: ராஜமவுலி விளக்கம் | மும்பையில் எதிரொலித்த கரூர் சம்பவம் | மகள் பெயரில் மகளிர் இசை குழுவை உருவாக்கும் இளையராஜா | பிளாஷ்பேக்: நாயகனாக தோல்வி அடைந்த கவுண்டமணி | பிளாஷ்பேக்: சிவாஜியுடன் பத்மினி சகோதரிகள் நடித்த படம் | ஆதீன இசைப்புலவர் விருது: இன்ப அதிர்ச்சியில் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா | 'தோசா கிங்' ஹீரோ யார்? சர்ச்சை கதை என்பதால் பலரும் தயக்கம் | 7 படங்களில் தேறியது 2 மட்டுமே: பூவையார் தரப்பு புலம்பல் | 21 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகிறது சேரனின் ‛ஆட்டோகிராப்' |

2005ல் பி.வாசு இயக்கத்தில் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு என பலர் நடித்து வெளியான பிளாக்பஸ்டர் படம் சந்திரமுகி. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு பி.வாசு தயாரானபோது அதில் நடிக்க ரஜினி விரும்பவில்லை. அதன்காரணமாக ரஜினிக்கான அந்த கதையில் ராகவா லாரன்சை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்தார். கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே சந்திரமுகி-2 உருவாக இருப்பது போன்று பரபரப்பு செய்திகள் வெளியாகின. ஆனால் அதையடுத்து அப்படம் குறித்த பேச்சே இல்லாததோடு, ராகவா லாரன்சும் ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார்.
இதனால் சந்திரமுகி-2 படம் கைவிடப்பட்டு விட்டதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து நடிகர் ராகவா லாரன்ஸ் அதுகுறித்து ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், சந்திரமுகி-2 படம் கைவிடப்படவில்லை. தற்போது நான் நடித்து வரும் ருத்ரன் முடிந்ததும் சந்திரமுகி-2 படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்று தெரிவித்து அப்படம் குறித்து பரவி வரும் வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.