'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! | வேறு வழியின்றி விஜய் படத்தை இயக்கினேன் ; தங்கர் பச்சான் மகன் பட விழாவில் எஸ்.ஏ சந்திரசேகர் பரபரப்பு பேச்சு | தெலுங்கில் தனது முதல் படப்பிடிப்பை நிறைவு செய்த சோனாக்ஷி சின்ஹா | திரில்லரும் அல்ல.. பீல் குட் படமும் அல்ல.. 'தொடரும்' படம் குறித்து இயக்குனர் புது தகவல் | காருக்கு பேன்சி நம்பர் வாங்க போட்டி ; குஞ்சாக்கோ போபனுக்கு லக்.. நிவின்பாலிக்கு செக் | அஜித் குறித்து நெகிழ்ச்சி பதிவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர் | 'மதராஸி' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய அப்டேட்! | ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4, பென்ஸ்' படங்களின் நிலவரம் என்ன? | சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் |
2005ல் பி.வாசு இயக்கத்தில் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு என பலர் நடித்து வெளியான பிளாக்பஸ்டர் படம் சந்திரமுகி. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு பி.வாசு தயாரானபோது அதில் நடிக்க ரஜினி விரும்பவில்லை. அதன்காரணமாக ரஜினிக்கான அந்த கதையில் ராகவா லாரன்சை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்தார். கடந்த ஆண்டு தொடக்கத்திலேயே சந்திரமுகி-2 உருவாக இருப்பது போன்று பரபரப்பு செய்திகள் வெளியாகின. ஆனால் அதையடுத்து அப்படம் குறித்த பேச்சே இல்லாததோடு, ராகவா லாரன்சும் ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார்.
இதனால் சந்திரமுகி-2 படம் கைவிடப்பட்டு விட்டதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து நடிகர் ராகவா லாரன்ஸ் அதுகுறித்து ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், சந்திரமுகி-2 படம் கைவிடப்படவில்லை. தற்போது நான் நடித்து வரும் ருத்ரன் முடிந்ததும் சந்திரமுகி-2 படப்பிடிப்பு தொடங்க உள்ளது என்று தெரிவித்து அப்படம் குறித்து பரவி வரும் வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.