பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

பாகுபலி, பாகுபலி -2, மணிகர்னிகா, மெர்சல் உள்பட பல படங்களுக்கு கதை எழுதியவர் விஜயயேந்திர பிரசாத். பாகுபலி இயக்குனர் ராஜமவுலியின் தந்தையான இவர், தற்போது ராமாயணத்தை மையமாக வைத்து ஒரு பான் இந்தியா படத்திற்கு கதை எழுதி வருகிறார். தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் தயாராகும் இந்த படம் ராமாணயத்தில் வரும் சீதாவின் வாழ்க்கை வரலாறு கதை என்பதால் சீதா அவதாரம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அலுகிகா தேசாய் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கான நடிகர் நடிகைகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.