பிளாஷ்பேக்: மேடை நாடகம், வெள்ளித்திரை இரண்டிலும் முத்திரை பதித்த “வியட்நாம் வீடு” | இப்போதைக்கு நான் சாக விரும்பவில்லை : விரக்தியில் பிரபல பாடகர் | நாகசைதன்யா நடிக்கும் புதிய வெப்சீரிஸ் ‛மாய சபா' | தொடரும் வில்லத்தனம் : வெளியான மம்முட்டியின் கலம்காவல் இரண்டாவது லுக் | மோகன்லாலுக்கு பரிசாக கால்பந்து வீரர் மெஸ்ஸி கையெழுத்திட்டு அனுப்பிய ஜெர்ஸி | மலையாள வில்லன் நடிகர் மீதான போதை வழக்கில் போலீசாருக்கு புதிய சிக்கல் | மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் ஏஆர் ரஹ்மான் | குட் பேட் அக்லி 11 நாள் வசூல் முழு விவரம் | காதலருடன் (?) திருப்பதியில் தரிசனம் செய்த சமந்தா | பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் |
மலையாள நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ், தந்தையின் பாதையில் நடிப்பு பக்கம் திரும்பிவிட, அவரது மகள் விஸ்மாயாவோ சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்து வருகிறார்.. ஆனால் தற்போது அவருக்குள் ஒளிந்து கொண்டுள்ள ஒரு எழுத்தாளரை, தான் எழுதி வெளியிட்டுள்ள, 'கிரையன்ஸ் ஆப் ஸ்டார்டஸ்ட்' என்கிற புத்தகம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த பிப்-14ல் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு இந்த புத்தகத்தை வெளியிட்ட விஸ்மாயா, தன்னுடைய தந்தையின் மிக நெருங்கிய நண்பர்களுக்கும் தனது நட்பு வட்டாரத்திற்கும் இந்த புத்தகத்தின் பிரதிகளை அனுப்பி வைத்தார். அதில் நடிகர் அமிதாப் பச்சனும் ஒருவர். இந்தப்புத்தகத்தை படித்துவிட்டு விஸ்மாயாவின் இலக்கிய திறமையை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அமிதாப்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “நான் ரொம்பவே வியக்கும் நடிகர் மோகன்லால், தனது மகள் விஸ்மாயா எழுதிய புத்தகம் ஒன்றை அனுப்பியுள்ளார். ரொம்பவே நுட்பமான, உணர்வுப்பூர்வமான பாடல்கள் மற்றும் ஓவியங்களின் பயணமாக இருக்கிறது இந்த படைப்பு... திறமை என்பது பரம்பரரை குணம்” என பாராட்டியுள்ளார். இவர் தவிர, நடிகர்கள் துல்கர் சல்மான், பிரித்விராஜ் உள்ளிட்டோரும் விஸ்மாயாவின் இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.