இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தென்னிந்திய சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை ராஷ்மிகா. 3 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. கூர்க்கை சேர்ந்த இவர் கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் அறிமுகமானார். கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கில் பிரபலமானார். டியர் காமிரேட் டப்பிங் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். இப்போது கார்த்தி ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 65வது படத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. சமீபத்தில் இவர் நடித்த கன்னட படமான பொகரு தமிழில் செமதிமிரு என்ற பெயரில் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் மிஷன் மஜ்னு என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். இதில் அவர் சித்தார்த் மல்கோத்ரா ஜோடியாக நடிக்கிறார் . இது இந்திய ராணுவத்தில் நடந்த ஒரு நிகழ்வை மையமாக கொண்ட படம். இதில் நடிக்க ராஷ்மிகாவுக்கு படத்தின் இயக்குனர் சாந்தனு பகாச்சி பயிற்சி அளித்து வருகிறார். இந்த பயிற்சி கடந்த 2 மாதங்களாக நடந்து வருகிறது. தற்போது புஷ்பா, ஆடாலு மீக்கு ஜோஹரு படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா. இதன் இடைவெளியில் அடிக்கடி மும்பை சென்று நடிப்பு பயிற்சி பெற்று வருகிறார்.