ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

சென்னை : பழம்பெரும் நடிகைகள் சரோஜா தேவி, சவுகார் ஜானகி, நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான தமிழக அரசின் கலைமாமணி விருது தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், யோகி பாபு, ராமராஜன், தயாரிப்பாளர்கள் ஐசரி கணேசன், தாணு ஆகியோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, சங்கீதா, மதுமிதா, பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, சவுகார் ஜானகி, பின்னணி பாடகி ஜமுனாராணி ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேப்போன்று இசையமைப்பாளர்கள் டி.இமான், தீனா, பாடகர்கள் சுஜாதா, அனந்து ஆகியோருக்கும், இயக்குனர்கள் கவுதம் மேனன், லியாகத் அலி கான், மனோஜ் குமார், ரவி மரியா, டிவி நடிகர்கள் நித்யா, சாந்தி வில்லியம்ஸ், நந்தகுமார் ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுகளை பெற இவர்கள் நாளை (பிப்.,20) மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகம் வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

