''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
சென்னை : பழம்பெரும் நடிகைகள் சரோஜா தேவி, சவுகார் ஜானகி, நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான தமிழக அரசின் கலைமாமணி விருது தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், யோகி பாபு, ராமராஜன், தயாரிப்பாளர்கள் ஐசரி கணேசன், தாணு ஆகியோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, சங்கீதா, மதுமிதா, பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, சவுகார் ஜானகி, பின்னணி பாடகி ஜமுனாராணி ஆகியோருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேப்போன்று இசையமைப்பாளர்கள் டி.இமான், தீனா, பாடகர்கள் சுஜாதா, அனந்து ஆகியோருக்கும், இயக்குனர்கள் கவுதம் மேனன், லியாகத் அலி கான், மனோஜ் குமார், ரவி மரியா, டிவி நடிகர்கள் நித்யா, சாந்தி வில்லியம்ஸ், நந்தகுமார் ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுகளை பெற இவர்கள் நாளை (பிப்.,20) மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகம் வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.