எந்த மாற்றமும் தெரியவில்லை : கீர்த்தி சுரேஷ் | ராம்சரணின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்! | வருகிற மார்ச் 24ம் தேதி நாகார்ஜுனா - அமலா தம்பதியின் மகன் அகில் திருமணம்! | இது சாமி விஷயம்- நறுக் பதில் கொடுத்த யோகி பாபு! | என்னை வியக்க வைத்த தனுஷ் - சேகர் கம்முலா! | 'நிறம் மாறும் உலகில்' படத்தில் 4 கதைகள் | பிளாஷ்பேக் : ஒரே ஹாலிவுட் படத்தை காப்பி அடித்து உருவான இரண்டு தமிழ் படங்கள் | பிளாஷ்பேக் : சொக்கலிங்கம் 'பாகவதர்' ஆனது இப்படித்தான் | சாய் பல்லவிக்கு கிடைத்த ஆசீர்வாதம்! | இந்தியா பசுமையை இழந்து விட்டதால் நியூசிலாந்தில் 'கண்ணப்பா'வை படமாக்கினோம் : விஷ்ணு மஞ்சு |
தமிழ் சினிமாவில் வேறு மொழிகளில் தயாராகி இங்கு தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் படங்களில் அதிக விலைக்கு விற்கப்பட்ட படம் 'பாகுபலி 2'.
இப்படத்தை தமிழிலும் சேர்தே படமாக்கியதாகச் சொல்வார்கள். முதல் பாகத்திலாவது சில காட்சிகளில் உதட்டசைவிற்கும், வசனத்திற்கும் பொருத்தம் இருந்தது. ஆனால், இரண்டாவது பாகத்தில் பொருத்தம் இல்லாமல் தான் இருந்தது. 'பாகுபலி' இரண்டு பாகப் படங்களையும் தெலுங்கில் மட்டுமே முழுமையாகப் படமாக்கினார்கள்.
இந்நிலையில் ராஜமௌலி தற்போது இயக்கி வரும் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் தமிழ்நாட்டு உரிமையை லைக்கா நிறுவனம் வாங்கியுள்ளது. அதன் விலை சுமார் 42 கோடி என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'பாகுபலி 2' படத்தின் உரிமை 47 கோடியாம். அதைவிட ஐந்து கோடி குறைவு.
'பாகுபலி' படத்திலாவது தமிழ் ரசிகர்கள் தங்களைத் தொடர்புபடுத்திக் கொள்ள அது ஒரு பொதுவான சரித்திரப் படமாக இருந்தது. ஆனால், 'ஆர்ஆர்ஆர்' படம் சுதந்திரத்திற்காகப் போராடிய தெலுங்கு சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய படம். அது எப்படி தமிழ் ரசிகர்களை படத்துடன் தொடர்புப்படுத்தி பார்க்க வைக்கும் என இங்கு கோலிவுட்டில் கேள்வி எழுப்புகிறார்கள். 42 கோடியே அதிகம்தான் என்கிறார்கள் அனுபவசாலிகள்.