லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
தமிழ் சினிமா ரசிகர்கள் நடிகைகளுக்கு கோயில் கட்டுவது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே நடிகைகள் குஷ்பு, நயன்தாரா உள்ளிட்டோருக்கு சிலர் கோயில் கட்டினார்கள். இந்நிலையில் பூமி, ஈஸ்வரன் ஆகிய இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ள நிதி அகர்வாலுக்கு ரசிகர்கள் சிலர் சிலை வைத்து கோயில் கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
இதுகுறித்து கேள்விப்பட்ட நிதி அகர்வால், ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ரசிகர்கள் என் மீது பொழியும் உண்மையான மற்றும் நிபந்தனையற்ற அன்பை கண்டு மிகவும் உற்சாகமடைந்துள்ளேன். எப்போதும் அவர்கள் எனக்கு ஆதரவாக நின்று வருகிறார்கள். எனது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் நிறைய தொண்டு செய்து வருகிறார்கள் என்பது பாராட்டுக்குரிய விஷயம். அதேசமயம் எனக்காக கட்டப்படும் கோயில், ஏழைகளுக்கான தங்குமிடமாகவும், உணவிடமாகவும், படிப்பளிக்கும் கூடமாகவும் இருந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்", என நிதி அகர்வால் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.