'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் சினிமாவின் அழகான ஹீரோக்களில் ஒருவர் அரவிந்த்சாமி. சினிமாவில் நல்ல நிலையில் இருக்கும்போதே அதிலிருந்து விலகி வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வந்தார். ஆனாலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடல் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்தார்.
அதன்பிறகு தனி ஒருவன், போகன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், செக்க சிவந்த வானம் படங்களில் நடித்தார். கள்ளபார்ட், சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி, நரகாசூரன், தலைவி உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இவைகள் அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது.
இந்நிலையில் ஒட்டு என்ற மலையாள படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் குஞ்சகோ போபன் அரவிந்த்சாமியுடன் நடிக்கிறார். தீ வண்டி படத்தின் இயக்குநர் டி.பி.பெலினி இயக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு சஜீவ் கதை எழுதியுள்ளார். ஹாசிப் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் மலையாளம் தமிழ் என இரு மொழிகளில் தயாரிக்கவுள்ளது.
அரவிந்த்சாமி 1992ம் ஆண்டு டாடி என்ற மலையாளப் படத்திலும், 25 ஆண்டுகளுக்கு முன்பு பரதன் இயக்கிய தேவராகம் படத்திலும் நடித்திருக்கிறார். அதன்பிறகு இப்போதுதான் மீண்டும் மலையாளத்தில் நடிக்கிறார்.