நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
30 வருடங்களுக்கு முன்பு சினிமாவில் அறிமுகமானவர் நதியா. தமிழில் பூவே பூச்சூடவா படத்தில் நடித்து, ஆண் ரசிகர்களை மட்டுமல்ல பெண் ரசிகர்களையும் சம்பாதித்தவர். நதியா கொண்டை, நதியா கம்மல், நதியா வளையல் என அப்போது அவர் பெயரில் வியாபாரமும் அமோகமாக நடந்தது. இரண்டாது படத்திலேயே கவர்ச்சி களத்தில் குதித்த நடிகைகளுக்கு மத்தியில் கடைசி படம் வரை கவர்ச்சியாக நடிக்காமல் ரசிகர்களை கவர்ந்தார்.
50 வயதை கடந்துவிட்ட நதியா இந்த வயதிலும் இளமையை தக்க வைத்திருக்கிறார். வெள்ளை நிற உடையில் தலையில் தொப்பி, கண்களுக்கு கூலிங் கிளாஸ் என கூலாக அமர்ந்திருக்கும் அவரின் போட்டோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி உள்ளது. அதை பார்த்துவிட்டு ஒரு சிலர் விமர்சித்தாலும் பலரும், வயசானாலும் அழகும் இளமையும் அப்படியே இருக்கு என கருத்து பதிவிட்டுள்ளனர்.