‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் |
30 வருடங்களுக்கு முன்பு சினிமாவில் அறிமுகமானவர் நதியா. தமிழில் பூவே பூச்சூடவா படத்தில் நடித்து, ஆண் ரசிகர்களை மட்டுமல்ல பெண் ரசிகர்களையும் சம்பாதித்தவர். நதியா கொண்டை, நதியா கம்மல், நதியா வளையல் என அப்போது அவர் பெயரில் வியாபாரமும் அமோகமாக நடந்தது. இரண்டாது படத்திலேயே கவர்ச்சி களத்தில் குதித்த நடிகைகளுக்கு மத்தியில் கடைசி படம் வரை கவர்ச்சியாக நடிக்காமல் ரசிகர்களை கவர்ந்தார்.
50 வயதை கடந்துவிட்ட நதியா இந்த வயதிலும் இளமையை தக்க வைத்திருக்கிறார். வெள்ளை நிற உடையில் தலையில் தொப்பி, கண்களுக்கு கூலிங் கிளாஸ் என கூலாக அமர்ந்திருக்கும் அவரின் போட்டோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி உள்ளது. அதை பார்த்துவிட்டு ஒரு சிலர் விமர்சித்தாலும் பலரும், வயசானாலும் அழகும் இளமையும் அப்படியே இருக்கு என கருத்து பதிவிட்டுள்ளனர்.