25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தற்போது தமிழில் இந்தியன் 2 படத்திலும், தெலுங்கில் ஆச்சார்யா படத்திலும் நடித்து வருகிறார்.
கடந்த வருடம் கௌதம் கிச்லு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால். திருமணத்திற்குப் பின் வரும் முதல் காதலர் தினத்தை ஒரு முன்னணி நடிகை பொதுவாக பெரிய ஸ்டார் ஓட்டலில் தான் கொண்டாடுவார். ஆனால், காஜல் அகர்வால் பொள்ளாச்சியில் உள்ள ஒரு சாதாரண மெஸ்ஸில் தன்னுடைய காதலர் தின டின்னரை சாப்பிட்டு ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
பொள்ளாச்சியில் ஒரு தம்பதியினர் நடத்தும் அந்த மெஸ்ஸுக்குச் சென்று சாப்பிட்டதோடு அவர்களைப் பற்றியும் பாராட்டி பதிவிட்டுள்ளார். “சாந்தி அக்கா மற்றும் பாலகுமார் அண்ணா ஆகியோர் அதிக அன்புடன் உணவைப் பரிமாறுவார்கள். அதனால்தான் கடந்த 27 வருடங்களாக அவர்களது உணவு தொடர்ந்து சுவையாக உள்ளது. இந்த சிறிய கடைக்கு நான் கடந்த ஒன்பது வருடங்களாக வந்து கொண்டிருக்கிறேன்,” எனக் கூறி அந்த தம்பதியினருடன் புகைப்படம் எடுத்து அதையும் பகிர்ந்திருக்கிறார்.
காஜல் அகர்வாலின் இந்த எளிமையான குணத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.