ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் |
ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்த விதார்த், மைனா படத்தின் மூலம் புகழ்பெற்றார். அதன்பிறகு முதல் இடம், மயிலு, ஜன்னல்ஓரம், வெண்மேகம், பட்டய கிளப்பணும் பாண்டியா, காடு, ஆள், குற்றமே தண்டனை, ஒரு கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை, வண்டி, சித்திரம் பேசுதடி 2ம் பாகம் உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது என்றாவது ஒரு நாள், அன்பறிவ், ஆற்றல், அஞ்சாமை, ஆயிரம் பொற்காசுகள் படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது விதார்த் தனது 25வது படத்திற்கு வந்துள்ளார். பெஞ்ச்மார்க் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தை சீனிவாசன் இயக்கி வருகிறார். இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான அண்ணாதுரை படத்தை இயக்கியவர் . த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகிறது.
விதார்த்துடன் தன்யா பாலகிருஷ்னன், விக்ரம் ஜெகதீஷ், பவுலின் ஜெசிகா, மாரிமுத்து, மூனார் ரமேஷ், அஜய், வினோத் சாகர், மூர்த்தி, சுபா வெங்கட், பேபி ஜனனி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் சீனிவாசன் கூறியதாவது: 6 பகல்கள் மற்றும் 7 இரவுகளில் நடப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. நாயகனுக்கு வரும் கனவுகளை மையப்படுத்திப் பரபரப்பாக நகரும் ஹாலிவுட் பாணியிலான படம்.
படத்தில் இசை முக்கிய பங்கு வகிப்பதால் முன்னணி இசையமைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. படத்தின் தலைப்பு, டீஸர், ட்ரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகவுள்ளது. என்றார்.