நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்த விதார்த், மைனா படத்தின் மூலம் புகழ்பெற்றார். அதன்பிறகு முதல் இடம், மயிலு, ஜன்னல்ஓரம், வெண்மேகம், பட்டய கிளப்பணும் பாண்டியா, காடு, ஆள், குற்றமே தண்டனை, ஒரு கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை, வண்டி, சித்திரம் பேசுதடி 2ம் பாகம் உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது என்றாவது ஒரு நாள், அன்பறிவ், ஆற்றல், அஞ்சாமை, ஆயிரம் பொற்காசுகள் படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது விதார்த் தனது 25வது படத்திற்கு வந்துள்ளார். பெஞ்ச்மார்க் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தை சீனிவாசன் இயக்கி வருகிறார். இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான அண்ணாதுரை படத்தை இயக்கியவர் . த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகிறது.
விதார்த்துடன் தன்யா பாலகிருஷ்னன், விக்ரம் ஜெகதீஷ், பவுலின் ஜெசிகா, மாரிமுத்து, மூனார் ரமேஷ், அஜய், வினோத் சாகர், மூர்த்தி, சுபா வெங்கட், பேபி ஜனனி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் சீனிவாசன் கூறியதாவது: 6 பகல்கள் மற்றும் 7 இரவுகளில் நடப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. நாயகனுக்கு வரும் கனவுகளை மையப்படுத்திப் பரபரப்பாக நகரும் ஹாலிவுட் பாணியிலான படம்.
படத்தில் இசை முக்கிய பங்கு வகிப்பதால் முன்னணி இசையமைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. படத்தின் தலைப்பு, டீஸர், ட்ரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகவுள்ளது. என்றார்.