உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
தமிழில் யுவன் யுவதி படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை ரீமா கல்லிங்கல். ஷோபனா, மஞ்சு வாரியரை போலவே, நடிகை ரீமா கல்லிங்கலும் நாட்டியத்தில் வல்லவர். அதனாலேயே பல மாணவர்களுக்கு நடனப்பயிற்சி அளிக்கும் விதமாக 'மாமாங்கம்' என்கிற நாட்டிய பள்ளியை கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு துவங்கினார். நடிகை, தயாரிப்பாளர், நாட்டியப்பள்ளி நிறுவனர் ஒரே நேரத்தில் மூன்று வேலைகளையும் கவனித்து வந்த ரீமா கல்லிங்கல் தற்போது தனது நாட்டியப்பள்ளியை மூடுவதாக அறிவித்துள்ளார்,
இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்த கொரோனா காலகட்டம் எனது நாட்டியப் பள்ளியையும் விட்டு வைக்கவில்லை. அதனால் வேறு வழியின்றி இதை மூடுகிறேன். இந்த இடத்தில் நடனம் சொல்லி தந்தது, நடன ஒத்திகை பார்த்தது, திரைப்படங்களை திரையிட்டது, ஒர்க்ஷாப் நடத்தியது என பசுமையான நினைவுகள் நிறைய உள்ளன. நாட்டியப்பள்ளி தான் மூடப்படுகிறதே தவிர வரும் காலங்களில் மேடை நாடகங்களை நாங்கள் தொடர்ந்து நடத்துவோம்” என கூறியுள்ளார் ரீமா கல்லிங்கல்