புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கன்னட நடிகர் யாஷ் நாயகனாக நடித்த கேஜிஎப் படம் 2018 டிசம்பரில் திரைக்கு வந்தது. பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். கன்னடத்தில் உருவான இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று டப் செய்யப்பட்டு அனைத்து மொழிகளிலுமே வசூல் சாதனை புரிந்தது. அதனால் மீண்டும் யாஷ்-பிரசாந்த் நீல் கூட்டணி கேஜிஎப் சாப்டர்-2 படத்திலும் இணைந்தது. இந்த படத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை கடந்த ஆண்டு ஜூலை 20ந்தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். ஆனால் லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு,2021 ஜூலை 16-ந்தேதி வெளியிடப்போவதாக தற்போது அறிவித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் யாஷ் வெளியிட்ட ஒரு டுவீட்டில் ஜூலை 16-ந்தேதி உங்கள் சீட் பெல்ட்டை நன்றாக போட்டுக் கொள்ள தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ஒரு டுவீட் போட, அது ரசிகர்களிடம் ஏராளமான லைக்ஸ் பெற்றது.
இந்த நிலையில், நடிகர் யாஷின் ரசிகர் ஒருவர், பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், கேஜிஎப் -2 படம் வெளியாகும் வருகிற ஜூலை 16-ந்தேதியில் இப்படத்தை காண மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அதனால் அன்றைய தினத்தை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதோடு இது ஒரு படம் மட்டுமின்றி எங்களது எமோஷன். எங்களது உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் என்றும் அந்த ரசிகர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
யாஷ் ரசிகரின் இந்த கடிதமும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.