எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் | உங்களை ஏமாற்ற மாட்டேன் லாலேட்டா : மோகன்லால் மகளை அறிமுகப்படுத்தும் இயக்குனர் உறுதி | சினிமாவில் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை: கிரேஸ் ஆண்டனி | சுரேஷ் கோபி பட சென்சார் விவகாரம் : சனிக்கிழமை படம் பார்க்கும் நீதிபதி | கவுதம் ராம் கார்த்திக் படத்தில் இணையும் பிரபலங்கள் | மீண்டும் ஒரு லெஸ்பியன் படம் | வரி உயர்வு : ஆகஸ்ட் முதல் படங்களை வெளியிடப் போவதில்லை : புதுச்சேரி விநியோகஸ்தர்கள் அறிவிப்பு | இங்கே ஹோம்லி, அங்கே கவர்ச்சி : ராஷ்மிகாவின் அடடே பாலிசி | பிளாஷ்பேக்: வசுந்தரா தாசை நிராகரித்த மணிரத்னம் |
போர்ப்ஸ் இதழ் ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் சாதனை புரியும் 30 வயதிற்குக் கீழுள்ள சாதனையாளர்களை 'போர்ப்ஸ் இந்தியா 30, 30க்குக் கீழ்' என்ற தலைப்பில் பெருமைப்படுத்துகிறது.
கடந்த 2020ம் ஆண்டிற்கான அந்தப் பட்டியலில் தென்னிந்திய நடிகையான கீர்த்தி சுரேஷ் இடம் பிடித்துள்ளார். ஆன்லைன் விண்ணப்பங்கள், நடுவர் சிபாரிசுகள், போர்ப்ஸ் இந்தியாவின் தனிப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தேர்வு செய்கிறார்கள்.
அந்தப் பட்டிலில் என்டர்டெயின்மென்ட் பிரிவில் கீர்த்தி சுரேஷ் தேர்வாகியுள்ளார். நெட்பிளிக்ஸ் 'புல்புல்'லில் சிறப்பாக நடித்த நடிகை திரிப்தி டிம்ரியும் அந்தப் பிரிவுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டு, அறிவியல், சமூக சேவை, இசை, மருத்துவம், தொழில், நிதி, உணவு, பேஷன், கல்வி, டிஜிட்டல், ஈகாமர்ஸ், விவசாயம், கலை, விளம்பரம் என பல்வேறு பிரிவுகளில் இப்படி 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
தென்னிந்திய அளவில் கீர்த்தி சுரேஷ் மட்டுமே அதில் தேர்வாகி உள்ளார். “போர்ப்ஸ் 30 பட்டியலில் தேர்வாகியுள்ளது பெருமையாக உள்ளது,” என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.