என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
போர்ப்ஸ் இதழ் ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் சாதனை புரியும் 30 வயதிற்குக் கீழுள்ள சாதனையாளர்களை 'போர்ப்ஸ் இந்தியா 30, 30க்குக் கீழ்' என்ற தலைப்பில் பெருமைப்படுத்துகிறது.
கடந்த 2020ம் ஆண்டிற்கான அந்தப் பட்டியலில் தென்னிந்திய நடிகையான கீர்த்தி சுரேஷ் இடம் பிடித்துள்ளார். ஆன்லைன் விண்ணப்பங்கள், நடுவர் சிபாரிசுகள், போர்ப்ஸ் இந்தியாவின் தனிப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை தேர்வு செய்கிறார்கள்.
அந்தப் பட்டிலில் என்டர்டெயின்மென்ட் பிரிவில் கீர்த்தி சுரேஷ் தேர்வாகியுள்ளார். நெட்பிளிக்ஸ் 'புல்புல்'லில் சிறப்பாக நடித்த நடிகை திரிப்தி டிம்ரியும் அந்தப் பிரிவுல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விளையாட்டு, அறிவியல், சமூக சேவை, இசை, மருத்துவம், தொழில், நிதி, உணவு, பேஷன், கல்வி, டிஜிட்டல், ஈகாமர்ஸ், விவசாயம், கலை, விளம்பரம் என பல்வேறு பிரிவுகளில் இப்படி 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
தென்னிந்திய அளவில் கீர்த்தி சுரேஷ் மட்டுமே அதில் தேர்வாகி உள்ளார். “போர்ப்ஸ் 30 பட்டியலில் தேர்வாகியுள்ளது பெருமையாக உள்ளது,” என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.