56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு | “என் மகள் எனக்கு மூன்றாம் மனுஷி தான்.. அஞ்சு பைசா கூட தரமாட்டேன்” ; ஸ்வேதா மேனன் ஓபன் டாக் | எட்டு வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் துருவா சார்ஜா, ரச்சிதா ராம் ஜோடி | 'விலாயத் புத்தா' கதையும் 'புஷ்பா' கதையும் ஒன்றா ? பிரித்விராஜ் விளக்கம் | அதிதி ராவ் ஹைதரி பெயரில் வாட்ஸ்அப்பில் மோசடி ; நடிகை எச்சரிக்கை | தெலுங்கில் ரீமேக் ஆகும் 'லப்பர் பந்து' | ஆர்யாவிற்கு ஜோடியாகும் அனுபமா பரமேஸ்வரன்! |

கடந்த 1991ல் சிரஞ்சீவி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் 'கேங்லீடர்'. விஜயா பப்பிநீடு என்பவர் இயக்கிய இப்படத்தில் கதாநாயகியாக விஜயசாந்தி நடிக்க, முக்கிய வேடங்களில், அதாவது சிரஞ்சீவியின் அண்ணனாக நடிகர் முரளி மோகன் மற்றும் தம்பியாக சரத்குமார் நடித்திருந்தனர். இந்தப்படம் வெளியாகி முப்பது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இந்த அண்ணன் தம்பிகள் மூவரது சந்திப்பும் கூட, 30 வருடங்கள் கழித்து தற்போது எதிர்பாரதவிதமாக அரங்கேறியுள்ளது.
ஆம்.. ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தான் இவர்கள் மீண்டும் ஒன்றாக சந்தித்து தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டுள்ளனர். சிரஞ்சீவி ஆச்சார்யா படப்பிடிப்பிற்காகவும், சரத்குமார் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பிற்காகவும், முரளி மோகன் வேறு ஒரு தெலுங்கு படத்தின் படப்பிடிப்பிற்காவும் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தற்போது தங்கி இருக்கின்றனர். அப்போது தான் ஏதேச்சையாக இவர்கள் மூவரது சந்திப்பும் நிகழ்ந்துள்ளது.