இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும்போதே திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் அமலாபால். அதே வேகத்தில் திருமண வாழ்க்கையில் இருந்தும் வெளியில் வந்தார். புதிய காதலர், தனிமை பயணம், மலையேற்றம் என ஜாலியாக இருந்து வந்த அமலாபாலின் வாழ்க்கையில் இப்போது பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது.
சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் தன்னை முழுமையாக ஆன்மிக பாதைக்கும் திருப்பி விட்டுள்ளார். கோவை ஈஷா யோகா மையத்தின் சிஷ்யை ஆகியிருக்கிறார். அங்கு தற்போது குண்டலினி யோகா கற்று வருகிறார். அதோடு பிற உயிர்களிடத்து அன்பு செலுத்த வேண்டும் என்பதற்காக தனது வீட்டில் நிறைய பூனைகளை வளர்க்க ஆரம்பித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது: என்னை நான் குணப்படுத்துகிறேன், மாற்றுகிறேன் எனது வரம்புகள், அச்சங்கள் மற்றும் எனது கடந்தகால திட்டங்கள் அனைத்தும் இனி எனக்கு சேவை செய்யாது. நான் என் வாழ்க்கையின் ஒரு புதிய அத்தியாயத்தில் அடியெடுத்து வைக்கிறேன். நான் தயார். என்று எழுதியிருக்கிறார். திருமண வாழ்க்கையில் சறுக்கல், காதல் தோல்வி ஆகியவை அவரை ஆன்மிகத்தின் பக்கம் திருப்பி இருப்பதாக கூறப்படுகிறது.