'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் நாட்டு நடப்புகள் குறித்து துணிச்சலான கருத்துக்களை கூறி வருகிறவர். தனது டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவு செய்வார். ஏற்கெனவே 2 முறை டுவிட்டர் நிர்வாகம் கங்கனாவின் கணக்கை முடக்கி அவரை எச்சரித்துள்ளது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் கங்கனா கவலைப்படவில்லை. இப்போது 3வது முறையாக முடக்கப்பட்டு எச்சரித்துள்ளது.
சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான தாண்டவ் வெப் சீரிஸ் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக அந்த சீரிசை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக கங்கனா தனது கருத்தை டுவிட்டரில பதிவு செய்தார். இந்த கருத்து இரு மத்தினரிடையே வன்முறையை தூண்டும் விதமாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் அந்த பதிவை நீக்கினார் கங்கனா.
இந்த நிலையில் கங்கனாவின் டுவிட்டர் கணக்கை தற்காலிமாக முடக்கி வைத்த டுவிட்டர் நிர்வாகம், ''டுவிட்டர் விதிமுறைகளை மீறும் எந்த ஒரு கணக்கின் மீதும் நடவடிக்கை எடுக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது. டுவிட்டரில் மக்கள் தங்கள் கருத்துக்களை சுந்திரமா வெளியிடுவதை நாங்கள் வரவேற்கிறோம். என்றாலும் எங்கள் கொள்கைபடி எந் ஒரு தனி நபரையோ, அல்லது ஒரு சமூக மக்களையோ குறிவைத்து தாக்குவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்'' என்று கூறியுள்ளது.