விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு |
பாலிவுட் நடிகை சன்னி லியோன், கடந்த இரண்டு ஆண்டுகளாக தென்னிந்திய மொழிகளிலும் குறிப்பாக மலையாளத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். அந்தவகையில் மலையாளத்தில் கடந்த 2019ல் மம்முட்டி நடித்த மதுர ராஜா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார் அதன்பின்னர் தற்போது ரங்கீலா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப்படங்களின் படப்பிடிப்புகள் தவிர, 2017ல் கேரளாவில் மொபைல்போன் ஷோரூம் திறப்பு விழாவுக்கு சன்னி லியோன் வந்தபோது கொச்சி நகரமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு அவரை காண்பதற்கு கூட்டம் கூடியது.
ஆனால் தற்போது அதே கேரளாவில் திருவனந்தபுரத்துக்கு எந்தவித பரபரப்புமின்றி வருகை தந்திருக்கிறார் சன்னி லியோன்.. இந்தமுறை அவர் வந்ததுள்ளது தனியார் ரிசார்ட் ஒன்றின் விளம்பரப்படத்தில் நடிப்பதற்காகவும் அப்படியே கேரளாவை சுற்றி பார்ப்பதற்காகவும் தான். அந்தவகையில் தனது குடும்பத்துடன் வந்துள்ள சன்னி லியோன் தற்போது, கொரோனா பரிசோதனை நடவடிக்கையாக, ஒரு வார காலத்திற்கு தனியார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதன்பிறகே படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறாராம் சன்னி லியோன்..