அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
பாலிவுட் நடிகை சன்னி லியோன், கடந்த இரண்டு ஆண்டுகளாக தென்னிந்திய மொழிகளிலும் குறிப்பாக மலையாளத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். அந்தவகையில் மலையாளத்தில் கடந்த 2019ல் மம்முட்டி நடித்த மதுர ராஜா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார் அதன்பின்னர் தற்போது ரங்கீலா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப்படங்களின் படப்பிடிப்புகள் தவிர, 2017ல் கேரளாவில் மொபைல்போன் ஷோரூம் திறப்பு விழாவுக்கு சன்னி லியோன் வந்தபோது கொச்சி நகரமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு அவரை காண்பதற்கு கூட்டம் கூடியது.
ஆனால் தற்போது அதே கேரளாவில் திருவனந்தபுரத்துக்கு எந்தவித பரபரப்புமின்றி வருகை தந்திருக்கிறார் சன்னி லியோன்.. இந்தமுறை அவர் வந்ததுள்ளது தனியார் ரிசார்ட் ஒன்றின் விளம்பரப்படத்தில் நடிப்பதற்காகவும் அப்படியே கேரளாவை சுற்றி பார்ப்பதற்காகவும் தான். அந்தவகையில் தனது குடும்பத்துடன் வந்துள்ள சன்னி லியோன் தற்போது, கொரோனா பரிசோதனை நடவடிக்கையாக, ஒரு வார காலத்திற்கு தனியார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதன்பிறகே படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறாராம் சன்னி லியோன்..