‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா படம் இந்தியில் குட்லக் ஜெர்ரி என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. இதில் நயன்தாரா நடித்த கேரக்டரில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு பாஸி பதானா நகரில் நடந்தபோது விவசாயிகள் போராட்டம் நடத்தினர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு இந்தி நடிகர், நடிகைகள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதனால் படப்பிடிப்பு தடைபட்டது. இதை தொடர்ந்து ஜான்வி கபூர் விவசாயிகளுக்கு ஆதரவான கருத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டார். தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வந்தது.
இந்த நிலையில் பாட்டியாலாவில் உள்ள பூபிந்தரா பகுதியில் நடந்து வந்த படப்பிடிப்பை, போராடும் விவசாயிகள் மீண்டும் தடுத்து நிறுத்தினார்கள். படப்பிடிப்பு தளத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினர். ஜான்விகபூரை திரும்பி செல்லும்படி கோஷமிட்டனர். இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
ஜான்வி கபூர் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் பாதுகாப்பாக அவர்கள் தங்கி இருந்த ஓட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போதும் விவசாயிகள் விடவில்லை. ஓட்டல் முன்பும் கூடி போராட்டம் நடத்தினர். இதனால் தற்போது அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வரும்வரை காத்திருக்க தயாரிப்பு தரப்பு முடிவு செய்திருக்கிறது.