ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மிஸ்கின் இயக்கிய முகமூடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.. ஆனால் அந்த படம் வரவேற்பை பெறாத நிலையில் ராசியில்லாத நடிகை என ஒதுக்கி வைக்கப்பட்டார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக தெலுங்கு சினிமாவில் அவரது ராசி ஒர்க் அவுட் ஆக தொடங்கியுள்ளது. அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார் பூஜா ஹெக்டே. அதிலும் கடந்த வருடம் தெலுங்கில் வெளியான அல வைகுண்டபுரம்லூ படத்தில் இடம்பெற்ற புட்டபொம்மா பாடல் இவரை ரசிகர்களுக்கு மிக நெருக்கமாக கொண்டு சென்றது.
இந்தநிலையில் தற்போது பிரபாஸுக்கு ஜோடியாக ராதே ஷ்யாம் என்கிற படத்தில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே. முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகி வரும் இந்தப்படத்தில் தற்போது தன்னுடைய போர்ஷனை நடித்து முடித்துவிட்டார். இந்த மகிழ்ச்சியை தன்னந்தனியாக கேக் வெட்டி கொண்டாடி உள்ளார் பூஜா.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கேள்விகள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் கேக் ஒன்றுமே அனைத்துக்குமான பதிலாக இருக்கும்.. ராதே ஷ்யாம் படப்பிடிப்பு முடிந்தது” என கூறியுள்ளார் பூஜா.