தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கொரோனா தொற்று பரவிய காலத்தில் இந்தியத் திரையுலகில் உள்ள மற்ற முன்னணி நடிகர்களை விட வில்லன் நடிகரான சோனு சூட் பல்வேறு உதவிகளைச் செய்தார். அவருடைய சேவை மனப்பான்மைக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து மனதாரப் பாராட்டினார்கள்.
சோனு சூட் சேவையால் ஈர்க்கப்பட்ட ஐதராபாத்தைச் சேர்ந்த நீச்சல் வீரரான 'டேன்க்பன்ட் சிவா' என்பவர் சோனு சூட் பெயரால் ஆம்புலன்ஸ் சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள பிரபலமான ஹுசைன் சாகர் ஏரியில் விழுந்து தத்தளித்த நூற்றுக்கணக்கானவர்களைக் காப்பாற்றியும், மூழ்கி இறந்து போனவர்களின் சடலங்களை மீட்டுத் தரும் சேவையைச் செய்பவர் சிவா. அவருக்கு மக்கள் அளித்த நன்கொடை மூலம் இந்த ஆம்புலன்ஸ் சேவையை ஆரம்பித்துள்ளார்.
“சோனு சூட் சேவை எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்தது. அதனால்தான் அவரது பெயரைச் சூட்டினேன்,” என சிவா தெரிவித்துள்ளார்.
ஆம்புலன்ஸ் சேவையை ஆரம்பித்து வைத்துப் பேசிய சோனு, “இந்த ஆம்புலன்ஸ் சேவையைத் துவக்கி வைப்பது எனக்கு பெருமையாக உள்ளது. சிவாவைப் பற்றியும், அவரது சேவையைப் பற்றியும் நான் கேள்விப்பட்டுள்ளேன். அவரைப் போன்ற பல சிவாக்கள் நமக்குத் தேவை. ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு உதவி செய்ய முன் வர வேண்டும்,” என கேட்டுக் கொண்டார்.