நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
சுசீந்திரன் இயக்கத்தில், சிலம்பரசன், நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடித்துள்ள 'ஈஸ்வரன்' பட வெளியீடு தொடர்பாக கடந்த சில நாட்களாக குழப்பம் நிலவி வந்தது.
தமிழ்நாட்டில் தியேட்டர்களில் படம் வெளியாகும் அன்றே வெளிநாடுகளில் ஓடிடியில் வெளியீடு என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இங்குள்ள தியேட்டர்காரர்கள் எதிர்ப்பு தெரிவிக்க அந்த அறிவிப்பில் இருந்து பின்வாங்கினார்கள்.
அடுத்து சிம்பு நடித்த 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், தனக்கு நஷ்ட ஈடாக சிம்பு தர வேண்டிய முதல் தவணை 2.4 கோடியை இந்தப் படத்தில் தர வேண்டும், அதைத் தரவில்லை என்று குற்றம் சாட்டினார்.
மேலும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், படத்தின் டிஜிட்டல் கன்டென்ட்டை தியேட்டர்களுக்கு அனுப்பும் க்யூப் நிறுவனம் இப்பட வேலையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பியது. அந்தக் கடித விவகாரத்தில் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றே தெரிகிறது.
இதனிடையே, சிம்பு விவகாரம் குறித்து இன்று கூடிய தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள், இனி சிம்பு படத்திற்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனாலும், படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டி கம்பெனி படத்தை டிஜிட்டல் மாற்றத்திற்காக 'லோட்' செய்துவிட்டதாக டுவீட் செய்துள்ளது.
பட வெளியீடு தொடர்பாக இத்தனை சிக்கல்கள் இருந்தாலும் படம் நாளை தியேட்டர்களில் எப்படியும் வெளியாகிவிடும் என்றே கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.