எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' | மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ் | கேமராவுக்கு பின்னால் எனக்கு நடிக்க தெரியவில்லை : மீனாட்சி சவுத்ரி | 'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள் | பரிதாபம் : ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒருவர் பலி | இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி | கருப்பு : அனைத்து பகல் காட்சிகளும் ரத்து | திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை அஞ்சலி |

பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக இன்று விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியாகியள்ளது. கொரோனா தாக்கத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதேசமயம் தியேட்டர்களில் முதலில் நூறு சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க அனுமதி வழங்கிய தமிழக அரசு, பின்னர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலால் அந்த அறிவிப்பை திரும்ப பெற்றது. அதனால் 50 சதவீதம் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்கிற உத்தரவே தற்போது நீடிக்கிறது.
ஆனால் சென்னையில் உள்ள காசி திரையரங்கில் 50 சதவீதத்திற்கும் அதிகமான .பார்வையாளர்கள் மாஸ்டர் படத்தை பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து அளவுக்கதிகமான கூட்டம் கூட அனுமதித்ததாக 188, 269 ஆகிய பிரிவுகளில் தியேட்டர் நிர்வாகத்தின் மீது புகார் பதிவு செய்யப்பட்டு 5000 ரூபாய் அபராத தொகையாக விதிக்கப்பட்டுள்ளது.
வெளிச்சத்துக்கு வந்தது இந்த ஒரு தியேட்டரின் விதிமீறல் தான்.. வெளிவராதது எத்தனையோ..?