'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக இன்று விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியாகியள்ளது. கொரோனா தாக்கத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதேசமயம் தியேட்டர்களில் முதலில் நூறு சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க அனுமதி வழங்கிய தமிழக அரசு, பின்னர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலால் அந்த அறிவிப்பை திரும்ப பெற்றது. அதனால் 50 சதவீதம் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்கிற உத்தரவே தற்போது நீடிக்கிறது.
ஆனால் சென்னையில் உள்ள காசி திரையரங்கில் 50 சதவீதத்திற்கும் அதிகமான .பார்வையாளர்கள் மாஸ்டர் படத்தை பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து அளவுக்கதிகமான கூட்டம் கூட அனுமதித்ததாக 188, 269 ஆகிய பிரிவுகளில் தியேட்டர் நிர்வாகத்தின் மீது புகார் பதிவு செய்யப்பட்டு 5000 ரூபாய் அபராத தொகையாக விதிக்கப்பட்டுள்ளது.
வெளிச்சத்துக்கு வந்தது இந்த ஒரு தியேட்டரின் விதிமீறல் தான்.. வெளிவராதது எத்தனையோ..?