சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
பொங்கல் பண்டிகை கொண்டாட்டமாக இன்று விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியாகியள்ளது. கொரோனா தாக்கத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் கழித்து தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதேசமயம் தியேட்டர்களில் முதலில் நூறு சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க அனுமதி வழங்கிய தமிழக அரசு, பின்னர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலால் அந்த அறிவிப்பை திரும்ப பெற்றது. அதனால் 50 சதவீதம் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்கிற உத்தரவே தற்போது நீடிக்கிறது.
ஆனால் சென்னையில் உள்ள காசி திரையரங்கில் 50 சதவீதத்திற்கும் அதிகமான .பார்வையாளர்கள் மாஸ்டர் படத்தை பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து அளவுக்கதிகமான கூட்டம் கூட அனுமதித்ததாக 188, 269 ஆகிய பிரிவுகளில் தியேட்டர் நிர்வாகத்தின் மீது புகார் பதிவு செய்யப்பட்டு 5000 ரூபாய் அபராத தொகையாக விதிக்கப்பட்டுள்ளது.
வெளிச்சத்துக்கு வந்தது இந்த ஒரு தியேட்டரின் விதிமீறல் தான்.. வெளிவராதது எத்தனையோ..?