ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
அமரர் கல்கி எழுதிய மிகப்பெரிய வரலாற்று நாவலான 'பொன்னியின் செல்வன்', புத்தக விரும்பிகளின் மனதை கவர்ந்த நாவல். இதை படமாக்கி வரும் இயக்குனர் மணிரத்னம், இதை தனது கனவு படமாகவே இயக்குகிறார். பாலிவுட்டின் ஐஸ்வர்யா ராய் உட்பட, தென்னிந்திய முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இதில் நடிக்கின்றனர்.. ஏற்கனவே சில நாட்கள் நடந்த படப்பிடிப்பு கொரோனா தாக்கம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் மீண்டும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ரகுமான், இந்த தகவலை உறுதி செய்துள்ளார். முதல்நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அனுபவத்தை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ள ரகுமான், “பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் இன்று முதல் கலந்து கொண்டுள்ளேன்.. முதல்நாள் முதல் காட்சியே, ஐஸ்வர்யா ராயுடன் நடித்ததில் மிகப்பெரிய சந்தோஷத்தில் இருக்கிறேன். படக்குழுவினர் உத்தரவு காரணமாக புகைப்படங்களை பகிர முடியவில்லை நண்பர்களே” என குறிப்பிட்டுளார். நடிகர் ரகுமான் மணிரத்னம் டைரக்சனில் நடிப்பதும், ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து நடிப்பதும் இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தகது. .