பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
பிரபுசாலமனின் கயல் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் ஆனந்தி. அப்படத்தினைத் தொடர்ந்து சண்டிவீரன், பொறியாளன், த்ரிஷா இல்லைனா நயன்தாரா, விசாரணை, பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது டைட்டானிக் காதலும் கடந்து போகும், அலாவுதீனும் அற்புத கேமராவும், ராவண கூட்டம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இணை இயக்குனர் சாக்ரடீஸ் என்பவரை ஆந்திராவில் வைத்து ஆனந்தி திருமணம் செய்து கொண்டார். ஆனந்தியின் இந்த திடீர் திருமணம் அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே அவர் திடீரென ஏன் ரசிகர்களுக்கு அறிவிக்காமலேயே திருமணம் செய்து கொண்டார் என்ற கேள்வியும் எழுந்தது.
தற்போது இதற்கு பதிலளிக்கும் விதமாக ஆனந்தி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நானும் சாக்ரடீஸூம் நான்கு வருடங்களாக காதலித்து வந்தோம். எங்கள் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டியதை அடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். அதன்படி பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம்.
திருமணத்திற்குப் பின்னரும் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். அதற்கு என் கணவரும் ஏற்கனவே சம்மதம் தெரிவித்து உள்ளார். தற்போது நான் நான்கு படங்களில் நடித்து வருகிறேன். அந்த படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு புதிய படங்கள் வாய்ப்பு வந்தாலும் நடிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.