‛காந்தாரா: சாப்டர் 1' படத்திற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணிப்பு: ரிஷப் ஷெட்டி | கல்கி -2 படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இணையும் சாய் பல்லவி! | புலம்பும் புயல் காமெடியன் | ராதிகா தாயார் மறைவு: நேரில் சென்று ஆறுதல் சொன்ன பாரதிராஜா | பிளாஷ்பேக்: தென்னிந்தியத் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் 'சினிமா ராணி' டி பி ராஜலக்ஷ்மி இயக்கிய 'மிஸ் கமலா' | சென்னையில் நடந்த 80ஸ் நடிகர், நடிகைகள் ரீ யூனியன் | அரச கட்டளை, தளபதி, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் - ஞாயிறு திரைப்படங்கள் | இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது |
கொரோனா பிரச்சினைகளால் ரிலீஸ் தள்ளிப் போன பல முன்னணி நடிகர்களின் படங்கள் அடுத்தடுத்து தியேட்டர்களில் வெளியாக இருக்கின்றன. வரும் பொங்கலுக்கு விஜய் நடித்த மாஸ்டர், சிம்பு நடித்த ஈஸ்வரன் போன்ற படங்கள் தியேட்டரில் ரிலீசாகின்றன.
வழக்கமாக இது போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீசாகும் போதும், தியேட்டர்களில் டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுவதுண்டு. தற்போது 50% சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள சூழலில், இம்முறையும் டிக்கெட்டுகள் அதிக விலைக்கு விற்கப் படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், டிக்கெட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் அரவிந்த்சாமி டுவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “வெவ்வேறு செலவில் தயாரிக்கப்படும் வெவ்வேறு தயாரிப்புகள், வெவ்வேறு தரத்தில் இருக்கும் திரையரங்குகளில், வெவ்வேறு ரியல் எஸ்டேட் மதிப்பு இருக்கும் பகுதிகளில் திரையிடப்படும்போது திரைப்பட டிக்கெட்டின் விலை ஏன் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது எனக்கு எப்போதும் புரிந்தது இல்லை" என அவர் தெரிவித்துள்ளார்.