பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரதமர் மோடிக்கு, நடிகர் உதயா ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது:ராணுவ வீரர்களின் பெருமையை உணர்த்தும், 'செக்யூரிட்டி' குறும்படம், பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.
அதன் அடிப்படையில், இந்த கோரிக்கையை முன் வைக்கிறேன். போர்க்களத்தில் சண்டையிடும் போது, வீர மரணமடைந்த நம் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான, பரம்வீர் சக்ரா விருதை, இந்தாண்டு குடியரசு தினத்தன்று, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, போர்க்களத்தில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் அவில்தார் பழனிக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் குறிப்பிட்டுள்ளார். கோரிக்கை மனுவின் நகலை, தமிழக பா.ஜ., தலைவர் முருகனிடம் வழங்கினார்.