20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
பிரதமர் மோடிக்கு, நடிகர் உதயா ஒரு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது:ராணுவ வீரர்களின் பெருமையை உணர்த்தும், 'செக்யூரிட்டி' குறும்படம், பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது.
அதன் அடிப்படையில், இந்த கோரிக்கையை முன் வைக்கிறேன். போர்க்களத்தில் சண்டையிடும் போது, வீர மரணமடைந்த நம் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான, பரம்வீர் சக்ரா விருதை, இந்தாண்டு குடியரசு தினத்தன்று, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, போர்க்களத்தில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் அவில்தார் பழனிக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் குறிப்பிட்டுள்ளார். கோரிக்கை மனுவின் நகலை, தமிழக பா.ஜ., தலைவர் முருகனிடம் வழங்கினார்.