எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
கொரானோ தளர்வுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் நவம்பர் 10ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அதை 100 சதவீதமாக மாற்ற வேண்டும் என திரையுலகினர் சார்பில் அரசுக்கு பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்று அரசு இன்று 100 சதவீத இருக்கை அனுமதிக்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
“சினிமா தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ் ஆகியவை ஏற்கெனவே உள்ள 50 சதவீத அனுமதியிலிருந்து 100 சதவீதமாக உயர்த்திக் கொள்ள ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட நடைமுறைகளுடன் பின்பற்றுமாறு அனுமதி அளிக்கப்படுகிறது. திரைப்படக் காட்சிகளுடன் கோவிட் 19 பற்றிய முன்னெச்சரிக்கை விஷயங்களைத் திரையிட்டு படம் பார்க்க வருபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது,” என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த உத்தரவிற்கு திரையுலகினர் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள்.