ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

கொரானோ தளர்வுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் நவம்பர் 10ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அதை 100 சதவீதமாக மாற்ற வேண்டும் என திரையுலகினர் சார்பில் அரசுக்கு பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்று அரசு இன்று 100 சதவீத இருக்கை அனுமதிக்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
“சினிமா தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ் ஆகியவை ஏற்கெனவே உள்ள 50 சதவீத அனுமதியிலிருந்து 100 சதவீதமாக உயர்த்திக் கொள்ள ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட நடைமுறைகளுடன் பின்பற்றுமாறு அனுமதி அளிக்கப்படுகிறது. திரைப்படக் காட்சிகளுடன் கோவிட் 19 பற்றிய முன்னெச்சரிக்கை விஷயங்களைத் திரையிட்டு படம் பார்க்க வருபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது,” என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த உத்தரவிற்கு திரையுலகினர் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள்.




