இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் தென்னிந்தியாவைத் தாண்டி அதிகம் வெளியாகாது. அதிலும், தமிழ்ப் படங்கள்தான் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா என மற்ற தென்னிந்திய மாநிலங்களில் அதிகம் வெளியாகும்.
தெலுங்குப் படங்கள் கர்நாடகாவிலும், தமிழ்நாட்டிலும் வெளியாகும். கன்னடப் படங்கள் தெலுங்கு மாநிலங்களில் மட்டும் ஓரளவிற்கு வெளியிடப்படும். மலையாளப் படங்கள் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட அளவிற்கு வரவேற்பைப் பெறும்.
ஆனால், 'பாகுபலி' படங்கள் மேலே சொன்ன கணக்குகள் அனைத்தையும் மாற்றியது. தென்னிந்திய மாநிலங்களில் மட்டுமல்லாது, வட இந்தியாவிலும் வெளியாகி 'பான் இந்தியா' வெளியீடாக வசூலை அள்ளிக் குவித்தது. அதற்கடுத்து பிரபாஸ் நடித்து வெளிவந்த 'சாஹோ' படமும் இந்தியா முழுவதும் 'பான் இந்தியா' வெளியீடாகவே வெளியானது. அவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படங்களும் அதைக் கணக்கில் கொண்டே பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்படுகின்றன. அதேப்போன்று கன்னடத்தில் வெளிவந்த கே.ஜி.எப்., படமும் பான் இந்தியா படமாக வெளியாகி வரவேற்பை பெற்றதால் இப்போது அதன் இரண்டாம் பாகமும் அதே பாணியில் உருவாகி உள்ளது.
விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள 'மாஸ்டர்' படம் 'பான் இந்தியா' வெளியீடாகத்தான் வெளியிடப்பட உள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் படத்தை இந்தியா முழுவதும் வெளியிட உள்ளார்கள். அதற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருகின்றன.
விஜய் படம் மட்டும்தான் 'பான் இந்தியா' வெளியீடாக வருமா எங்கள் அபிமான நடிகர்களின் படங்கள் வராதா என தற்போது மற்ற நடிகர்களின் ரசிகர்களும் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இனி, தமிழில் முக்கிய முன்னணி நடிகர்களின் படங்களின் வெளியீட்டின் போது 'பான் இந்தியா' ரிலீஸ் என்ற குரல் அதிகமாகவே ஒலிக்கும்.