'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் |
கொரட்டலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் 'ஆச்சார்யா' தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு ஐதராபாத்தில் ஆரம்பமாகி நடந்து வருகிறது.
அப்படத்திற்காக ஐதராபாத் புறநகர் பகுதியில் மிகப் பிரம்மாண்டமான கோயில் செட் ஒன்றை அமைத்துள்ளார்களாம். 20 ஏக்கர் பரப்பளவில் சுமார் 20 கோடி செலவு செய்து அந்த செட்டை கலை இயக்குனர் சுரேஷ் செல்வராஜன் உருவாக்கியிருக்கிறார்.
இந்தியாவிலேயே இதுவரை எந்த ஒரு படத்திற்கும் இப்படி ஒரு செட் அமைத்ததில்லை என டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
கோயில்கள், அறநிலையத் துறை பின்னணியில் தான் 'ஆச்சார்யா' படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். அதில் இந்த பிரம்மாண்ட கோயில் செட்டும் முக்கிய கதைக்களமாக உள்ளதாம். படத்தை இந்திய அளவில் பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார்கள்.