ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாத மத்தியில் மூடப்பட்ட தியேட்டர்கள் நவம்பர் மாதம் 10ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அரசு தரப்பில் அனுமதி தரப்பட்டது.
டிசம்பர் மாதத்திலேயே அதை 100 சதவீதமாக மாற்ற வேண்டும் என தியேட்டர் சங்கங்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்தன. இருப்பினும் அனுமதி வழங்கப்படவில்லை. எப்படியும் புத்தாண்டு பரிசாக அனுமதி தந்துவிடுவார்கள் என எதிர்பார்த்தார்கள், அதுவும் நடக்கவில்லை.
கடந்த வாரத்தில் நடிகர் விஜய் கூட தமிழக முதல்வரைச் சந்தித்து அது தொடர்பான கோரிக்கையை வைத்தார். விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' படம் ஜனவரி 13ம் தேதியன்றும், சிம்பு நடித்துள்ள 'ஈஸ்வரன்' படம் ஜனவரி 14ம் தேதியன்றும் வெளியாக உள்ளன.
எப்படியும் அதற்குள் 100 சதவீத அனுமதி கொடுத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் அப்படக்குழுவினரும், தியேட்டர்காரர்களும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் அதற்குள் அறிவிப்பு வெளியாகுமா என்ற பரபரப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.
100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கிடைத்தால் மட்டுமே 'மாஸ்டர்' போன்ற படங்கள் லாபத்தை எட்டி முடியும். எனவே, திரையுலகத்தினர் சார்பில் அரசுக்கு அழுத்தம் கொடுப்பார்களா அல்லது அவர்களாகவே அறிவிக்கும் வரை அமைதி காப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.