மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்த நடிகர் ரஜினிகாந்த்திற்கு ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் வீடு திரும்பினார். அதோடு, உடல்நிலையை காரணம் காட்டி அரசியலுக்கு வரவில்லை எனவும் அறிவித்துவிட்டார். இதை அவரது ரசிகர்கள் சிலர் ஏற்றாலும், பலர் ஏமாற்றத்துடன் தான் உள்ளனர். தற்போது அவர், தனது போயஸ் தோட்ட இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்நிலையில், ரஜினி இல்லத்திற்கு நமோ நாராயண சுவாமிகள் வருகைத் தந்தார். அவரை ரஜினியும், லதாவும் வரவேற்றனர். பின்னர் ரஜினியின் மனதை அமைதிப்படுத்த ஸ்படிக மாலை அணிவித்த நமோ நாராயண சுவாமிகள், சிறிது நேரம் அவருடன் உரையாடி விட்டு சென்றார். இந்த போட்டோ சமூகவலைதளங்களில் வெளியாகி உள்ளது.