அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
தமிழ் சினிமாவின் பிரபல சவுண்டு என்ஜினியர் ஸ்டீபன் ராயல். முன்னணி இசை அமைப்பாளர்களுடன் சுமார் 200 படங்களில் பணியாற்றியவர், தற்போது இசை அமைப்பாளர் ஆகியிருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:
பொதுவாகவே சவுண்ட் என்ஜினியர்கள் பாதி இசை அமைப்பாளர்கள் தான். இசை அமைப்பாளராக வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அதற்கான நேரம் வரட்டும் என்று காத்திருந்தேன். இப்போது வந்திருக்கிது. 4 படத்திற்கு இசை அமைக்கிறேன்.
சஞ்சய்ராம் இயக்கும் குற்றாலம் எனது முதல் படம். இதன் இசை உரிமத்தை சோனி நிறுவனம் வாங்கியிருப்பதே எனது முதல் வெற்றி. அடுத்து அதிர்ஸ்டம் 143, நெஞ்சில் ஒரு ராகம், பாசக்கார கூட்டம் படங்களுக்கு இசை அமைக்கிறேன். இதற்கு முன் பல இசை ஆல்பங்களை வெளியிட்டிருக்கிறேன்.
திமுக தலைவர் கருணாநிதி மறைந்தபோது காவியத்தலைவன் என்ற இசை ஆல்பம் வெளியிட்டேன். அது பெரும் வரவேற்பை பெற்றது. கருணாநிதி குடும்பத்தினர் என்னை வீட்டுக்கு அழைத்து கவுரவித்தனர். யாருடைய பாணியையும் பின்பற்றாமல் எனக்கென தனி பாணி அமைத்து செல்ல விரும்புகிறேன். என்றர்.