இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு |
விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பலர் நடித்து தீபாவளிக்கு வெளிவந்த 'சர்கார்' படம் 250 கோடி வசூலைத் தாண்டிவிட்டதாக சிலர் தகவலைப் பரப்பி வருகிறார்கள். அது உலகம் முழுவதும் வசூலித்த தொகையாம்.
உண்மையில் படம் 150 கோடி வசூலைத் தொட்டிருக்குமா என்பதே சந்தேகம்தான் என்றும் கோலிவுட்டில் சொல்கிறார்கள். இப்படம் தமிழ் நாட்டில் சில ஏரியாக்களில் மட்டும் நல்ல வசூலைக் கொடுத்துள்ளதாம். சில ஏரியாக்களில் பத்து சதவீதம் வரை நஷ்டம் வரும் என்கிறார்கள்.
இப்படத்தின் தமிழ்நாட்டு உரிமை சுமார் 80 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது என்று ஒரு தகவல். இதுவரை பங்குத் தொகையாக 70 கோடி மட்டுமே கிடைத்துள்ளதாம். இன்றும் நாளையும் மட்டும்தான் இப்படத்தின் கடைசி முக்கிய வசூல். அதன்பின் படம் வசூல் செய்ய வாய்ப்பில்லை என்கிறார்கள்.
நவம்பர் 29ம் தேதியன்று சர்கார் ஓடிய பல தியேட்டர்களில் '2.0' படத்தைத் திரையிட உள்ளார்கள். அதனால், அதற்கு மேல் வசூல் இருக்க வாய்ப்பில்லை.