ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
நடிகர் ரஜினிகாந்த் சமூகவலைதளமான டுவிட்டரிலும் இருக்கிறார். கடந்த 2014-ம் ஆண்டு, மே 5ம் தேதி டுவிட்டரில் இணைந்தார். ஆரம்பம் முதலே தன் சினிமா பற்றிய புரொமோஷன்களை தவிர்த்து வதந்தவர், அவ்வப்போது சமூக பிரச்னைகள் தொடர்பான கருத்துக்களை தெரிவித்தார்.
அரசியலில் களம் இறங்க போகிறேன் என்று அறிவித்த பின்னர் தன் மக்கள் மன்றம் தொடர்பாகவும், சமூக பிரச்னைகள் தொடர்பான விஷயங்களுக்கும் கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில், டுவிட்டரில் அவரை பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை எட்டியிருக்கிறது.
இதனிடையே, கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் ரஜினி. டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது : "கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது ஆறுதல்கள். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல உதவிகளைச் செய்துவரும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை பாராட்டுகிறேன். நமது நிவாரண உதவிகள் தொடரட்டும்" என பதிவிட்டிருக்கிறார்.