ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
நவம்பர் 16-ம் தேதியன்று 'காற்றின் மொழி', 'செய்', 'சித்திரம் பேசுதடி 2' மற்றும் 'உத்தரவு மகாராஜா' ஆகிய படங்கள் வெளியாக தயாரிப்பாளர்கள் சங்கம் அனுமதியளித்துள்ள நிலையில் திடீரென்று 'திமிரு புடிச்சவன்' படமும் நவம்பர் 16-ம் தேதி வெளியீடு என்று அதன் தயாரிப்பாளர் விளம்பரம் கொடுத்தார். இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் 'திமிரு புடிச்சவன்' படக்குழுவுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒரு படம் வெற்றிபெற கதை மட்டுமே முக்கியம். சென்ற மாதம் இதை நாம் கண்கூடாக கண்டோம். ரிலீஸ் தேதி, எதிர்ப்பு, விளம்பரம், திரையின் தரம், எண்ணிக்கை போன்றவை மிகச்சிறிய காரணிகள். ஆனால், திரைத்துறையில் இத்தகைய காரணங்களைச் சொல்லி பதற்றப்படுகிறார்கள். இது வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்தார்.
அவருடைய கருத்தைக் கண்டு கடுப்பான காற்றின் மொழி தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் காட்டமாய் பதிலடி கொடுத்திருக்கிறார்.
“'சர்கார்' நன்றாக ஓடுவதால், எங்களுக்கு குறைந்த அளவு திரையரங்குகளே கிடைக்கும். எல்லாத் திரைப்படங்களுக்கும் இந்த முறை திரையரங்குகள் கிடைப்பது கடினமே. அதுவும் இன்னும் 13 நாட்களில் பெரிய படமான '2.0' வெளிவரவிருக்கிறது. எனவே, குறிப்பிட்ட காலத்திற்குள் சம்பாதித்துவிட வேண்டும் அல்லது முடிந்து போகவேண்டும் என்பது போன்ற நிலை. அதனால் தான் கவலைப்படுகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
நவம்பர் 16-ல் படங்களை வெளியிடுவதில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக எஸ்.ஆர்.பிரபு டுவிட்டரில் தெரிவித்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.