ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
அழகும், திறமையும் இருந்தும் ஒரே ஒரு வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கிறார் சுவாசிகா. 9 வருடங்களுக்கு முன்பு வைகை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சுவாசிகா. அதன் பிறகு கோரிப்பாளையம், மைதானம், கண்டதும் காணாததும், சோக்காளி உள்பட பல படங்களில் நடித்தார், தென்னிந்திய மொழிகளில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார். தமிழில் அவர் சமுத்திரகனி ஜோடியாக நடித்த சாட்டை படம் மட்டுமே தமிழில் அவர் சந்தித்த ஒரே ஒரு வெற்றிப் படம். அதற்கு பிறகும்கூட அவருக்கு சரியான வாய்ப்பு இல்லை.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது எவனும் புத்தனில்லை படத்தில் நடித்துள்ளார். வி சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாராகியுள்ள இந்தப் படத்தில் நபிநந்தி, சரத் என்ற புதுமுகங்கள் அறிமுகமாகிறர்கள். சுவாசிகாவுடன் நிகாரிகாவும் இன்னொரு ஹீரோயினாக நடித்துள்ளார். நான் கடவுள் ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். மரியா மனோகர் இசை அமைத்துள்ளார், ராஜா சேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார், எஸ்.விஜயசேகரன் இயக்கி உள்ளார்.
"இதன் படப்பிடிப்புகள் சென்னை, மூனார், மலேசியாவில் நடந்துள்ளது. மலைவாழ் மக்களின் வாழ்க்கையை பின்னணியாக கொண்டு ஜனரஞ்சகமான படமாக உருவாகி உள்ளது. அண்ணன் தங்கை பாசத்தை உள்ளடக்கிய படமாக உருவாக்கப் பட்டுள்ளது. ஆக்ஷன் திரில்லர் படமாக மலை வாழ் கிராம மக்களின் வாழ்வியலை இதில் சொல்லி இருக்கிறோம். சுவாசிகாவுக்கு திருப்பம் தருகிற படமாக இது இருக்கும். என்கிறார் இயக்குனர் விஜயசேகரன்.