ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
பொல்லாதவன், ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் நடித்திருக்கிறார் தனுஷ். சென்னையின் முப்பது ஆண்டுகால வரலாற்றை விவரிக்கும் விதமாக இந்தப்படம் உருவாகியுள்ளது.
3 பாகங்களாக எடுக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. கடைசியில் ஒரே பாகமாக வெளியிட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் வடசென்னை படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளனர்.
இந்தப் படத்தின் ஆக்ரோஷமான காட்சிகளை அப்படியே கொடுக்க விரும்பியதாலும், படத்தின் தீவிரம் குறையாதவாறு இருக்க விரும்பினோம். அதனால் எவ்வித சென்சார் கட்களும் இன்றி 'ஏ' சான்றிதழுடன் அக்டோபர் 17-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது வடசென்னை” என்று இதற்கான காரணத்தை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது வட சென்னை படத்தில் வன்முறைக்காட்சிகள் நிறைந்திருக்கிறது என்பதை இப்படி நாசூக்காக தெரிவித்துள்ளார் தனுஷ். இந்த படத்தில் தனுஷுடன் ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் அமீர், சமுத்திரகனி உட்பட பலர் நடித்துள்ளனர்.
சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.