ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பெண்கள் பாலியல் ரீதியாக தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டதை தெரிவிக்கும் விதமாக சமூகவலைதளங்களில் #MeToo என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு, உலகம் முழுக்க பிரபலமாகி உள்ளது. ஒவ்வொரு துறையில் இருந்து பல பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
சினிமா துறையிலும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை இந்த குற்றச்சாட்டு நீண்டு கொண்டே போகிறது.
பெங்களூரைச் சேர்ந்த சந்தியா மேனன் என்ற பத்திரிகையாளர், ஒரு பெண் தன்னிடம் கூறியதாக ஒரு தகவலை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். அதில், பாடலாசிரியர் வைரமுத்து, அந்த பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டார் என கூறினார். இதை பாடகி சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் ரீ-டுவீட் செய்தார்.
பெயர் குறிப்பிடாத பெண்ணின் தகவலை எப்படி நீங்கள் நம்பலாம் என சின்மயிக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்தன. சின்மயி, இது உண்மை தான் நம்புங்கள் என கூறியிருந்தார். அதேப்போன்று நடிகர் ராதாராவி மீதும் பெயர் குறிப்பிடாத ஒரு பெண், தன்னிடம் அவர் அத்துமீறியதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் சின்மயி, நேரடியாக தானே வைரமுத்துவால் பாதிக்கப்பட்டேன் என டுவிட்டரில் பதிவிட்டு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது : சுவிட்சர்லாந்தில் இலங்கை தமிழர்கள் தொடர்பான வீழமாட்டோம் என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் பாடுவதற்காக நானும் சென்றிருந்தேன். நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் சென்றுவிட்டனர். என்னையும், எனது அம்மா மட்டும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் இருக்க சொன்னார். எதற்கு என்று கேட்டபோது, வைரமுத்துவை ஹோட்டலில் போய் பாருங்கள், அவருக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்றார். நான் கோபமாகி மறுத்துவிட்டேன். உடனே இந்தியா திரும்பிவிட்டோம்.
Year 2005/2006 maybe.
Veezhamattom. An album for Srilankan Tamizhs that I had sung in, as had Manikka Vinayagam sir.
I dont remember if it was a book or an album release or both now; the performances and launch happened in Switzerland in (Bern / Zurich maybe)
— Chinmayi Sripaada (@Chinmayi) October 9, 2018
I asked why. He told me to cooperate. I refused. We demanded to be sent back to India. He said You wont have a career!
My mother and I both put our foot down, career vendam mannum vendam. Demanded an earlier flight to India and came back.
— Chinmayi Sripaada (@Chinmayi) October 9, 2018
3, maybe 4 years ago, he had a book release function & asked me to sing Tamizh Thaai vaazhthu.
I said I would be unable to.
He in turn responded I ll tell (a politician) you spoke ill of him on stage, yelled at me and kept the phone down
I bawled. My parents in law consoled me
— Chinmayi Sripaada (@Chinmayi) October 9, 2018
Then had the courage to call his manager back & told him I ll go and tell the same politician you re lying because I have NEVER given a political speech and HE will trust ME.
This for refusing to sing.
And you ask why victims dont name him?!
To hell with those of you who do.
— Chinmayi Sripaada (@Chinmayi) October 9, 2018
இப்போது புரிகிறதா, வைரமுத்து மீது ஏன் பிறர் குற்றம் சொல்ல மறுக்கிறார்கள் என்று..., அவருக்கு அந்தளவுக்கு செல்வாக்கு உள்ளது.
சின்மயின் இந்த குற்றச்சாட்டை திரையுலகினர் யாரும் வரவேற்காத நிலையில் நடிகர் சித்தார்த் மட்டும், சின்மயிக்கு டுவிட்டரில் ஆதரவு தெரிவித்துள்ளார்.
Multiple women are speaking out against Kavignar #Vairamuthu. Without judging anyone, they must be heard. When somebody of @Chinmayis stature who has so much to lose, stands by the accusers, thats huge! There will be investigation. First step #ListenToTheAccuser #MeToo #Timesup
— Siddharth (@Actor_Siddharth) October 9, 2018
வைரமுத்து பதில்
தன் மீதான குற்றச்சாட்டுக்கு வைரமுத்து டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அதில், "அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்" என பதிவிட்டிருக்கிறார்.
அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.
— வைரமுத்து (@vairamuthu) October 10, 2018
வைரமுத்து விளக்கமளித்த சில நிமிடங்களிலேயே, அவர் ஒரு பொய்யர் என டுவிட்டரில் பதிவிட்டார் சின்மயி.