‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
மீடு சர்ச்சையின்போது பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறினார் பாடகி சின்மயி. தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை மற்றும் பாலியல் தொல்லை பற்றி குரல் கொடுத்து வருகிறார். அதோடு வைரமுத்துவிற்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்.
இந்நிலையில் வைரமுத்துவின் இலக்கிய பொன்விழாவை முன்னிட்டு வைரமுத்து இலக்கியம் 50 எனும் இலச்சினையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு வாழ்த்தினார். இதுப்பற்றி, வாவ் என குறிப்பிட்டார் சின்மயி. மேலும், ‛‛இந்த வாவை பாத்துட்டு 'அவர பாராட்டுறீங்களே'ன்னு அறிவிலிகள் தான் கேப்பாய்ங்க. எத்தன பொண்ணுங்க மேல கைய்ய வெச்சாலும் எல்லா சப்போர்டும் உண்டுன்னு வெட்ட வெளிச்சமா தெரியுதே நம்ம முற்போக்கு நாட்ல. பெண்கள் இங்க பாதுகாப்பு எல்லாம் எதிர்பார்க்கக்கூடாது. நாம நம்ம வேலைய பாப்போம்'' என பதிவிட்டுள்ளார்.