ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
முகவரி, தொட்டி ஜெயா, 6 மெழுகுவர்த்திகள் போன்ற படங்களை இயக்கியவர் வி.இசட் துரை. சில மாதங்களுக்கு முன்னர் இவர் இயக்கிய ஏமாலி படம் வெளியானது. சமுத்திரகனி, அதுல்யா ரவி நடித்த இந்தப்படம் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் அடுத்தப்படியாக இருட்டு என்ற படத்தை இயக்குகிறார். சுந்தர்.சி, நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஹீரோவாக, போலீஸாக நடிக்கிறார். கிரிஷ் இசையமைக்கிறார். இந்திரா சௌந்தர்ராஜன் வசனம் எழுத, ஸ்க்ரீன் சீன் மீடியா என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படம் திகில் படமாக உருவாகிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது. மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.
தற்போது சுந்தர் சி, சிம்புவை வைத்து 'அத்தரண்டிகி தாரேதி' தெலுங்கு படத்தை தமிழில் ரீ-மேக் செய்கிறார்.