ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்த பஹத் பாசில் 2011ல் தான் கதாநாயகன் ரோலில் நடிக்க துவங்கினார். சுமாரான படங்களில் பெயரளவுக்கு நடித்துவந்த அவர் 2012க்கு மேல் 22 பீமேல் கோட்டயம், அன்னயும் ரசூலும் ஆகிய படங்களில் தொடர்ந்து அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி திறமையான நடிகர் என பெயர்பெற்றார். அப்படி மாறியதற்கான காரணத்தை சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார் பஹத் பாசில்.
தற்போது தமிழில் ஆரண்ய காண்டம் புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து வருகிறார் பஹத் பாசில். இந்தப்படத்தில் தியாகராஜனுடன் பணியாற்றிய அனுபவமே ரொம்ப வித்தியாசமாக இருந்ததாக கூறியுள்ள பஹத் பாசில், தான் நடிக்க வந்த புதிதில் ஆரண்ய காண்டம் படம் பார்த்த பின் தான், ஒரு நடிகனாக எப்படி மாறவேண்டும் என தன்னம்பிக்கை கிடைத்ததாக பெருமையுடன் கூறியுள்ளார்.