ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சர்கார் படத்தை முடித்துவிட்ட நடிகர் விஜய், தன் ரசிகர் மன்ற பொறுப்பாளரான புதுச்சேரி புஸ்ஸி ஆனந்த் மகளின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க மனைவி சங்கீதாவுடன் புதுச்சேரி வந்தார். அங்குள்ள, நாவற்குளம் சங்கமித்ரா மகாலில் நேற்று மாலை வரவேற்பு விழா நடந்தது.
விஜய் வருகிறார் என தெரிந்ததும் அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டுவிட்டனர். இதனால் திருமண மண்டபம் ரசிகர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவால் மணமக்கள் அருகில் சென்று கூட வாழ்த்து தெரிவிக்க முடியாத நிலை உருவானது.
பின்னர், ஒருவழியாக விஜய்யும், சங்கீதாவும் மணமக்களை சென்று வாழ்த்தினர். ஆனால் ஓரிரு நிமிடங்களிலேயே மண்டபத்தை விட்டு கிளம்பினர், ஆனால் அவர்களால் காரில் சென்று ஏற முடியவில்லை. அந்தளவுக்கு ரசிகர்கள் திரண்டு விட்டனர். கடும் சிரமத்திற்கு இடையே அவர்கள் காரில் ஏறி சென்றனர்.
இதுஒருபுறம் இருக்க மண்டபத்தில் விஜய்யை பார்க்க முண்டியடித்த ரசிகர்கள், அங்கிருந்த இருக்கைகள் மீது எகிறி குதித்ததால் இருக்கைகள் சேதம் அடைந்தன.