பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடிக்கும் படம் பொன் மாணிக்கவேல். பிரபுதேவா உதவியாளர் ஏ.சி.முகில் இயக்குகிறார். இந்த படத்தின் டைட்டில் காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் பெயரில் இருப்பதால் இது அவருடைய கதையோ என்று சந்தேகம் உள்ளது. இதுகுறித்து இயக்குனர் ஏ.சி.முகில் கூறியதாவது:
எனது சொந்த ஊர் சேலம். சேலம் மாவட்டத்தில் காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் பணியாற்றினார். அவரது அதிரடி நடவடிக்கைகள் குறித்து அப்போது பெருமையாக பேசுவார்கள். அந்த பாதிப்பு தான் இந்தக் கதை உருவாக காரணம். படத்திற்கு முதலில் பொன்மனச் செம்மல் என்று டைட்டில் வைக்கலாம் என்றிருந்தேன். படத்தின் ஹீரோ பெயர் தான் பொன் மாணிக்கவேல். அதையே படத்துக்கும் வைத்து விட்டேன்.
பிரபுதேவா எப்படி போலீசாக நடிக்கிறார் என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம். ஆனால் இந்த கதையை கேட்டவுடனேயே ஓகே சொன்ன அவர் அதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டு உடம்பை பிட்டாக மாற்றி போலீஸ் அதிகாரியாகவே மாறினார். நிவேதா பெத்துராஜ், அவரது மனைவி அன்பரசியாக நடிக்கிறார். போலீஸ் அதிகாரி மனைவி என்பதால் அவருக்கு பயந்து அடக்க ஒடுக்கமாக வீட்டுக்குள் வாழ்கிற பெண் அல்ல. தனது லட்சியத்துக்காக போராடுகிற பெண்ணாக நடிக்கிறார். என்றார்.