தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடிக்கும் படம் பொன் மாணிக்கவேல். பிரபுதேவா உதவியாளர் ஏ.சி.முகில் இயக்குகிறார். இந்த படத்தின் டைட்டில் காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் பெயரில் இருப்பதால் இது அவருடைய கதையோ என்று சந்தேகம் உள்ளது. இதுகுறித்து இயக்குனர் ஏ.சி.முகில் கூறியதாவது:
எனது சொந்த ஊர் சேலம். சேலம் மாவட்டத்தில் காவல்துறை அதிகாரி பொன் மாணிக்கவேல் பணியாற்றினார். அவரது அதிரடி நடவடிக்கைகள் குறித்து அப்போது பெருமையாக பேசுவார்கள். அந்த பாதிப்பு தான் இந்தக் கதை உருவாக காரணம். படத்திற்கு முதலில் பொன்மனச் செம்மல் என்று டைட்டில் வைக்கலாம் என்றிருந்தேன். படத்தின் ஹீரோ பெயர் தான் பொன் மாணிக்கவேல். அதையே படத்துக்கும் வைத்து விட்டேன்.
பிரபுதேவா எப்படி போலீசாக நடிக்கிறார் என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கலாம். ஆனால் இந்த கதையை கேட்டவுடனேயே ஓகே சொன்ன அவர் அதற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டு உடம்பை பிட்டாக மாற்றி போலீஸ் அதிகாரியாகவே மாறினார். நிவேதா பெத்துராஜ், அவரது மனைவி அன்பரசியாக நடிக்கிறார். போலீஸ் அதிகாரி மனைவி என்பதால் அவருக்கு பயந்து அடக்க ஒடுக்கமாக வீட்டுக்குள் வாழ்கிற பெண் அல்ல. தனது லட்சியத்துக்காக போராடுகிற பெண்ணாக நடிக்கிறார். என்றார்.