குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
பிரபல ஆவணப் பட இயக்குனர் திவ்யபாரதி. இவர் இயக்கிய கக்கூஸ் என்ற ஆவணப்படம் பல விருதுகளைப் பெற்றது. இதையே திரைப்படமாக்கும் முயற்சியில் அவர் இருக்கிறார். தற்போது ஓகி புயல் பாதிப்பு பற்றி யாரும் வரவில்லை என்ற ஆவணப்படத்தை இயக்கி வருகிறார். இதன் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் தேசிய கொடி அவமானப்படுத்தப்படுவதாக கூறி போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள திவ்யபாரதி, கடந்த 3ந் தேதி முதல் கூடலூர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார். கையெழுத்திட செல்லும்போது போலீசார் தன்னை டார்ச்சர் செய்வதாக திவ்யபாரதி குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:
முன்ஜாமீன் பெற்ற பின்னர் காவல்நிலையத்தில் விசாரணை எனும் பெயரில் காக்க வைக்கிறார்கள். எழுத்து பூர்வமான கேள்விக்கு ஆங்கிலத்தில் பதில் தரும்படி வற்புறுத்துகிறார்கள். இது சட்டத்திற்கு முரணானது. மேலும் நான் தங்கியிருக்கும் பகுதியில் உள்ள வீட்டை 24 மணி நேரமும் போலீசார் கண்காணிக்கிறார்கள். இதன் மூலம் என் பகுதி மக்களை பீதியடைய வைக்கிறார்கள். என்னை அங்கிருந்து மக்களே விரட்ட வேண்டும் என்கிற எண்ணத்தோடு செயல்படுகிறார்கள். காவல்துறையின் இந்த நடவடிக்கை என்னை மிகவும் பாதித்துள்ளது.
படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடியாத அளவிற்கு தொல்லை கொடுக்கிறார்கள். எனது புதிய ஆவணப் படமான 'யாரும் வரவில்லை' என்ற ஒகி புயல் பாதிப்புகள் தொடர்பான பணிகளை முடக்கும் வகையில் உள்ளது. எனது 'கக்கூஸ்' என்ற ஆவணப்படம் மற்ற மாநிலங்களில் ரிலீசான நிலையில், தமிழகத்தில் வெளியிட அனுமதி மறுக்கப்படுகிறது. இதற்காக பல்வேறு மிரட்டல்களும் வந்ததுள்ளது. நீதிமன்றம் மூலம் தடைகளை நீக்கி சமூகத்துக்கு எதிரான அடக்கு முறைகளை தொடர்ந்து போராடி வெளிப்படுத்துவேன்.
இவ்வாறு திவ்யபாரதி கூறியுள்ளார்.