மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
மெர்க்குரி படத்தை தொடர்ந்து லக்ஷ்மி, யங் மங் சங், சார்லி சாப்ளின் 2 உள்ளிட்ட 5 படங்களில் நடித்து வருகிறார் பிரபு தேவா. இவற்றில் ஏ.சி.முகில் செல்லப்பன் இயக்கும் படத்தில் போலீஸாக நடிக்கிறார். பிரபுதேவா ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார், இமான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு பொன் மாணிக்கவேல் என பெயரிட்டுள்ளனர்.
தமிழகத்தில் சிலை கடத்தல் சம்பவம் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுதொடர்பான குற்றவாளிகள் தொடர்ந்து பிடிபட்டும், ஏராளமான சிலைகள் மீட்கப்பட்டும் வருகின்றன. இதை சிறப்பாக செய்து வருகிறார் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல்.
இவரின் பெயர் படத்தின் தலைப்பாக இருப்பதாலும், படத்தில் பிரபுதேவா போலீஸாக நடிப்பதாலும், இது சிலை கடத்தல் சம்பந்தப்பட்ட கதையாகவும், பிரபு தேவா பொன் மாணிக்கவேல் ரோலில் நடிக்கலாம் என தெரிகிறது.