அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
மெர்க்குரி படத்தை தொடர்ந்து லக்ஷ்மி, யங் மங் சங், சார்லி சாப்ளின் 2 உள்ளிட்ட 5 படங்களில் நடித்து வருகிறார் பிரபு தேவா. இவற்றில் ஏ.சி.முகில் செல்லப்பன் இயக்கும் படத்தில் போலீஸாக நடிக்கிறார். பிரபுதேவா ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார், இமான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு பொன் மாணிக்கவேல் என பெயரிட்டுள்ளனர்.
தமிழகத்தில் சிலை கடத்தல் சம்பவம் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுதொடர்பான குற்றவாளிகள் தொடர்ந்து பிடிபட்டும், ஏராளமான சிலைகள் மீட்கப்பட்டும் வருகின்றன. இதை சிறப்பாக செய்து வருகிறார் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல்.
இவரின் பெயர் படத்தின் தலைப்பாக இருப்பதாலும், படத்தில் பிரபுதேவா போலீஸாக நடிப்பதாலும், இது சிலை கடத்தல் சம்பந்தப்பட்ட கதையாகவும், பிரபு தேவா பொன் மாணிக்கவேல் ரோலில் நடிக்கலாம் என தெரிகிறது.