டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சென்னை உங்களை வரவேற்கிறது படத்தை இயக்கிய மருதுபாண்டி இயக்கத்தில் சசிகுமார், நந்திதா ஸ்வேதா, எழுத்தாளர் வசுமித்ரா, ஸ்ரீஜித் ரவி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கும் அசுரவதம் படம் கடந்த வாரம் வெளியானது.
7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சசிகுமார் நடிப்பில் வெளியான சில படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தன.
இந்நிலையில் அசுரவதம் படம் தனக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார் சசிகுமார். ஆனால் வழக்கமான பழி வாங்கும் கதையாக எடுக்கப்பட்டதால் அசுரவதம் படத்துக்கு மக்களிடம் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
இதற்கிடையில் அசுரவதம் படத்தை இயக்குநர் மருதுபாண்டியை சுதந்திரமாக இயக்கவிடாமல் சசிகுமார் தலையிட்டதோடு, தன்னுடைய நண்பரான ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிரை பாதி படத்தை இயக்கவைத்தார் என்றும் தகவல் அடிபடுகிறது.
அதனால்தான் இயக்குநரால் இந்தப்படத்தை வெற்றிப்படமாக கொடுக்கமுடியவில்லை என்றும், ஸ்கிரிப்ட்டில் உள்ளதுபோல் படத்தை எடுக்கவில்லை என்றும் அந்தப்படத்தில் பணியாற்றியவர்கள் சொல்கிறார்கள்.