ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
விஷால், சமந்தா, அர்ஜூன் நடித்த இரும்புத்திரை தமிழ் நாட்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விஷால் படங்களிலேயே அதிக வசூலை ஈட்டியது. இந்தப் படத்தை தெலுங்கில் அபிமன்யுடு என்ற பெயரில் டப் செய்து வெளியிட்டனர். அங்கும் இந்தப் படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அறிமுக இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கிய இந்த படத்தை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமும் தயாராக இருக்கிறது.
ஆந்திராவில் வெளியான படம், இதுவரை 12 கோடிக்கும் மேல் வசூலித்து தொடர்ந்து நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு நேரடி தெலுங்கு படத்திற்கு நிகரான வசூலை படம் பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தகவல் படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. படம் 25 கோடி வரை வசூலிக்கும் என்று தெலுங்கு திரைப்பட வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கிறது.